Sunday, October 3, 2010

Thirukural - Chapter 24 Cont...

234 - நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தே ளுலகு.

If men do virtuous deeds by world-wide ample glory crowned,
The heavens will cease to laud the sage for other gifts renowned.

  Explanation:

இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈ.ட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது.

If one has acquired extensive fame within the limits of this earth, the world of the Gods will no longer praise those sages who have attained that world.

Saturday, October 2, 2010

Thirukural - Chapter 24 Cont...

233 - ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற்
பொன்றாது நிற்பதொன் றில்.

Save praise alone that soars on high,
Nought lives on earth that shall not die.

  Explanation:

ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை.

There is nothing that stands forth in the world imperishable, except fame, exalted in solitary greatness.

Friday, October 1, 2010

Thirukural - Chapter 24 Cont...

232 - உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்
றீவார்மேல் நிற்கும் புகழ்.

The speech of all that speak agrees to crown
The men that give to those that ask, with fair renown.

  Explanation:

போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும்.

Whatsoever is spoken in the world will abide as praise upon that man who gives alms to the poor.

Thursday, September 30, 2010

Thirukural - Chapter 24

231 - ஈ.த லிசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு.

See that thy life the praise of generous gifts obtain;
Save this for living man exists no real gain.

  Explanation:

கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை.

Give to the poor and live with praise. There is no greater profit to man than that.

Wednesday, September 29, 2010

Thirukural - Chapter 23

221 - வறியார்க்கொன் றீவதே ஈ.கைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

Call that a gift to needy men thou dost dispense,
All else is void of good, seeking for recompense.
  Explanation:

இல்லாதவர்க்கு வழங்குவதே ஈ.கைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.

To give to the destitute is true charity. All other gifts have the nature of (what is done for) a measured return.

222 - நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈ.தலே நன்று.

Though men declare it heavenward path, yet to receive is ill;
Though upper heaven were not, to give is virtue still.
  Explanation:

பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது பெருமையல்ல; சிறுமையே ஆகும். கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.

To beg is evil, even though it were said that it is a good path (to heaven). To give is good, even though it were said that those who do so cannot obtain heaven.

223 - இலனென்னும் எவ்வம் உரையாமை ஈ.தல்
குலனுடையான் கண்ணே யுள.

'I've nought' is ne'er the high-born man's reply;
He gives to those who raise themselves that cry.
  Explanation:

தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு ஈ.வது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்.

(Even in a low state) not to adopt the mean expedient of saying "I have nothing," but to give, is the characteristic of the mad of noble birth.

224 - இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணு மளவு.

The suppliants' cry for aid yields scant delight,
Until you see his face with grateful gladness bright.
  Explanation:

ஈ.தல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்.

To see men begging from us in disagreeable, until we see their pleasant countenance.

225 - ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின்.

'Mid devotees they're great who hunger's pangs sustain,
Who hunger's pangs relieve a higher merit gain.
  Explanation:

பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.

The power of those who perform penance is the power of enduring hunger. It is inferior to the power of those who remove the hunger (of others).

226 - அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

Let man relieve the wasting hunger men endure;
For treasure gained thus finds he treasure-house secure.
  Explanation:

பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது. அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்.

The removal of the killing hunger of the poor is the place for one to lay up his wealth.

227 - பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
தீப்பிணி தீண்ட லரிது.

Whose soul delights with hungry men to share his meal,
The hand of hunger's sickness sore shall never feel.
  Explanation:

பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை.

The fiery disease of hunger shall never touch him who habitually distributes his food to others.

228 - ஈ.த்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.

Delight of glad'ning human hearts with gifts do they not know.
Men of unpitying eye, who hoard their wealth and lose it so?
  Explanation:

ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈ.ட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈ.வு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?

Do the hard-eyed who lay up and lose their possessions not know the happiness which springs from the pleasure of giving ?

229 - இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல்.

They keep their garners full, for self alone the board they spread;-
'Tis greater pain, be sure, than begging daily bread!
  Explanation:

பிறர்க்கு ஈ.வதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது.

Solitary and unshared eating for the sake of filling up one's own riches is certainly much more unpleasant than begging.

230 - சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈ.த லியையாக் கடை.

'Tis bitter pain to die, 'Tis worse to live.
For him who nothing finds to give!
  Explanation:

சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது.

Nothing is more unpleasant than death: yet even that is pleasant where charity cannot be exercised.

Wednesday, September 15, 2010

Thirukural - Chapter 22 - Cont...

214 - ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

Who knows what's human life's befitting grace,
He lives; the rest 'mongst dead men have their place.
  Explanation:

ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான்.

He truly lives who knows (and discharges) the proper duties (of benevolence). He who knows them not will be reckoned among the dead.

215 - ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.

The wealth of men who love the 'fitting way,' the truly wise,
Is as when water fills the lake that village needs supplies.
  Explanation:

பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.

The wealth of that man of eminent knowledge who desires to exercise the benevolence approved of by the world, is like the full waters of a city-tank.

216 - பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.

A tree that fruits in th' hamlet's central mart,
Is wealth that falls to men of liberal heart.
  Explanation:

ஈ.ர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்.

The wealth of a man (possessed of the virtue) of benevolence is like the ripening of a fruitful tree in the midst of a town.

217 - மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.

Unfailing tree that healing balm distils from every part,
Is ample wealth that falls to him of large and noble heart.
  Explanation:

பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம், செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும்.

If wealth be in the possession of a man who has the great excellence (of benevolence), it is like a tree which as a medicine is an infallible cure for disease.

218 - இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர்.

E'en when resources fall, they weary not of 'kindness due,'-
They to whom Duty's self appears in vision true.
  Explanation:

தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர்.

The wise who know what is duty will not scant their benevolence even when they are without wealth.

219 - நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யா தமைகலா வாறு.

The kindly-hearted man is poor in this alone,
When power of doing deeds of goodness he finds none.
  Explanation:

பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான்.

The poverty of a benevolent man, is nothing but his inability to exercise the same.

220 - ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.

Though by 'beneficence,' the loss of all should come,
'Twere meet man sold himself, and bought it with the sum.
  Explanation:

பிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக் கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும்.

If it be said that loss will result from benevolence, such loss is worth being procured even by the sale of one's self.

Wednesday, September 8, 2010

Thirukural - Chapter 22 - Cont...

213 - புத்தே ளுலகத்தும் ஈ.ண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.

To 'due beneficence' no equal good we know,
Amid the happy gods, or in this world below.

  Explanation:

பிறர்க்கு உதவிடும் பண்பாகிய ``ஒப்புரவு'' என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது.

It is difficult to obtain another good equal to benevolence either in this world or in that of the gods.