Wednesday, January 4, 2017

கடவுள் வாழ்த்து குறள் 2 - Thirukkural Couplet 2

குறள் :
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

உரை:
   தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?.

Translation:
No fruit have men of all their studied lore, Save they the 'Purely Wise One's'feet adore.

Explanation:
What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?..

Sunday, January 1, 2017

கடவுள் வாழ்த்து குறள் 1 - Thirukkural Couplet 1

குறள் 1:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

உரை:
   எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம்    கடவுளில் தொடங்குகிறது.

Translation:
A, as its first of letters, every speech maintains; The "Primal Deity" is first through all the world's domains.

Explanation:
As all letters have the letter A for their first, so the world has the eternal
God for its first
.

Monday, March 28, 2011

Thirukural - Chapter 41 Cont...

410 - விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர்.

மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு.

Learning's irradiating grace who gain,
Others excel, as men the bestial train.


Explanation: As beasts by the side of men, so are other men by the side of those who are learned in celebrated works.

Sunday, March 27, 2011

Thirukural - Chapter 41 Cont...

409 - மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங் கற்றா ரனைத்திலர் பாடு.

கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்.

Lower are men unlearned, though noble be their race,
Than low-born men adorned with learning's grace.


Explanation: The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they may have been born in a low caste.

Saturday, March 26, 2011

Thirukural - Chapter 41 Cont...

408 - நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு.

முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்.

To men unlearned, from fortune's favour greater-evil springs
Than poverty to men of goodly wisdom brings.


Explanation: Wealth, gained by the unlearned, will give more sorrow than the poverty which may come upon the learned.

Friday, March 25, 2011

Thirukural - Chapter 41 Cont...

407 - நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம் மண்மாண் புனைபாவை யற்று.

அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.

Who lack the power of subtle, large, and penetrating sense,
Like puppet, decked with ornaments of clay, their beauty's vain pretence.


Explanation: The beauty and goodness of one who is destitute of knowledge by the study of great and exquisite works, is like (the beauty and goodness) of a painted earthen doll.

Thursday, March 24, 2011

Thirukural - Chapter 41 Cont...

406 - உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக் களரனையர் கல்லா தவர்.

கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது. காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்.

'They are': so much is true of men untaught;
But, like a barren field, they yield us nought!


Explanation: The unlearned are like worthless barren land: all that can be said of them is, that they exist.