Tuesday, September 7, 2010

Thirukural - Chapter 22 - Cont...

212 - தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.

The worthy say, when wealth rewards their toil-spent hours,
For uses of beneficence alone 'tis ours.

  Explanation:

தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.

All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolence.

Monday, September 6, 2010

Thirukural - Chapter 22

211 - கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு.

Duty demands no recompense; to clouds of heaven,
By men on earth, what answering gift is given?

  Explanation:

கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.

Benevolence seeks not a return. What does the world give back to the clouds ?

Sunday, September 5, 2010

Thirukural - Chapter 21 Cont....

210 - அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.

The man, to devious way of sin that never turned aside,
From ruin rests secure, whatever ills betide.

  Explanation:

வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.

Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path.

Saturday, September 4, 2010

Thirukural - Chapter 21 Cont....

209 - தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்
துன்னற்க தீவினைப் பால்.

Beware, if to thyself thyself is dear,
Lest thou to aught that ranks as ill draw near!

  Explanation:

தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது.

If a man love himself, let him not commit any sin however small.

Friday, September 3, 2010

Thirukural - Chapter 21 Cont....

208 - தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயா தடியுறைந் தற்று.

Man's shadow dogs his steps where'er he wends;
Destruction thus on sinful deeds attends.

  Explanation:

ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய செயல்களில் ஈ.டுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்.

Destruction will dwell at the heels of those who commit evil even as their shadow that leaves them not.

Thursday, September 2, 2010

Thirukural - Chapter 21 Cont....

207 - எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென் றடும்.

From every enmity incurred there is to 'scape, a way;
The wrath of evil deeds will dog men's steps, and slay.

  Explanation:

ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும்.

However great be the enmity men have incurred they may still live. The enmity of sin will incessantly pursue and kill.

Wednesday, September 1, 2010

Thirukural - Chapter 21 Cont....

206 - தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.

What ranks as evil spare to do, if thou would'st shun
Affliction sore through ill to thee by others done.

  Explanation:

வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்.

Let him not do evil to others who desires not that sorrows should pursue him.